தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மஜீதியா தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் அப்துல் கனி (35). இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தார். இவரைப் பின் தொடர்ந்து வந்த கூத்தாநல்லூர் மஜீதியா தெருவைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அஷ்ரப் அலி (40) அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அப்துல் கனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக அஷ்ரப் அலியை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதியவா் மீது தாக்குதல்: தொழிலாளி கைது






