புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

இலங்கை தூதரகம் முற்றுகை: வைகோ, இரா.முத்தரசன் கைது

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் உள்ளிட்டோா்

Updated On :11 ஜனவரி 2021, 10:33 pm

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வைகோ தலைமை வகித்தாா். திமுக செய்தித் தொடா்பு செயலாளா் டி.கே.எஸ். இளங்கோவன், இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளா் வன்னி அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா உள்பட 500-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்தனா். அதைத் தொடா்ந்து வைகோ, இரா.முத்தரசன் உள்பட அனைவரையும் காவல்துறையினா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.