திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. கடந்த 3 மாதத்தில் நான்கு முறை அணை முழு கொள்ளளவை எட்டியது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீர்மட்டம் 89.50 அடியிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு உள்வரத்தாக வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நீர்ப்பிடிப்பு பகுதியில் மிக கனமழை பெய்தது. இரவு 8 மணி அளவில் அணைக்கு சுமார் 8000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணை பகுதியில் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









