/

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 10:51 am

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதன் மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மிக கனமழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.