அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

அவிநாசியில் வேளாண் சட்ட நகல் எரித்து போராட்டம்

அவிநாசியில்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் புதன்கிழமை வேளாண் சட்ட நகல் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :13 ஜனவரி 2021, 4:31 pm IST

அவிநாசியில்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் புதன்கிழமை வேளாண் சட்ட நகல் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன் புதிதாக வேளாண் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது. இதனை கண்டித்தும், மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தியும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் 49 நாள்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் முகாமிட்டு பல்வேறு கட்டமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் போகிப் பண்டிகையை திருநாளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் அவிநாசியில் வேளாண் சட்ட நகல் எரித்துக் கண்டன கோஷமிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவிநாசி சேவூர் சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. முத்துச்சாமி, விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் எஸ். வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் இஷாக், ஒன்றியக் குழு உறுப்பினர் மோகன், செல்வராஜ், இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், பொறுப்பாளர் மணி, மதிமுக சார்பில் சுப்பிரமணி, பாபு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் லோகநாதன், ராஜ்குமார் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பழனிச்சாமி, பொன்னுச்சாமி, பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.