மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: நீர்வரத்து அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

News image

முல்லை பெரியாறு அணை

Updated On :13 ஜனவரி 2021, 6:53 am

கம்பம்: முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, முல்லையாறு, தேக்கடி ஏரி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 121.55 அடியாகவும், நீர் இருப்பு, 2,935, நீர்வரத்து 825 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு  700 கன அடியாகவும் இருந்தது.

புதன்கிழமை  நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 122.25 அடியாகவும், நீர் இருப்பு, 3,074, நீர்வரத்து விநாடிக்கு 2,315 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.

தொடர்ந்து செவ்வாய் மற்றும் புதன் கிழமை குமுளி, தேக்கடி, பெரியார் அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் புதன்கிழமை நிலவரப்படி பெரியாறு அணைப் பகுதியில், 13.0 மில்லி மீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 78.0 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.