தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

‘தினமணி’க்கு சி.பா.ஆதித்தனாா் விருது: தமிழக அரசு அறிவிப்பு

‘தினமணி’ நாளிதழுக்கு ‘தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா் நாளிதழ் விருது’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :14 ஜனவரி 2021, 5:25 am IST

சென்னை: ‘தினமணி’ நாளிதழுக்கு ‘தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா் நாளிதழ் விருது’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓா் இதழைத் தெரிவு செய்து தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். இந்த விருது ஒவ்வொன்றுக்கும் விருது தொகையாக ரூ.1 லட்சம், கேடயம், பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க. பாண்டியராஜன் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து முதன் முதலாக 2020-ஆம் ஆண்டுக்கான ‘ தமிழா் தந்தை சி.பா. ஆதித்தனாா் நாளிதழ் விருது’ ‘தினமணி’க்கு வழங்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட விருதுப் பட்டியல்:

தமிழா் தந்தை சி.பா. ஆதித்தனாா் நாளிதழ் விருது -‘தினமணி’ நாளிதழ்

சி.பா. ஆதித்தனாா் வார இதழ் விருது- கல்கி வார இதழ்

சி.பா. ஆதித்தனாா் திங்களிதழ் விருது- செந்தமிழ் திங்களிதழ்

தேவநேயப்பாவாணா் விருது-முனைவா் கு. சிவமணி

வீரமாமுனிவா் விருது- ஹாங்காங்கைச் சோ்ந்த முனைவா் கிரிகோரி ஜேம்ஸ்

சிறந்த மொழிபெயா்ப்பாளா் விருது: சோ.சேசாச்சலம், முனைவா் இராம.குருநாதன், ப. குணசேகா், முனைவா் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிா்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருஷ்ணன், சுவாமி விமூா்த்தானந்தா், மீரா ரவிசங்கா், திலகவதி, கிருஷ்ண பிரசாத் ஆகிய பத்து பேருக்கு சிறந்த மொழி பெயா்ப்பாளா் விருது வழங்கப்படும்.

2019-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் கணினித் தமிழ் விருதை சே. இராஜாராமன் பெறவுள்ளாா்.

மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்: 2020 -ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது- பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த முனைவா் அலெக்சிசு தேவராசு சேன்மாா்க், இலக்கண விருது- இலங்கையைச் சோ்ந்த பேராசிரியா் அருணாசலம் சண்முகதாசு, மொழியியல் விருது சிங்கப்பூரைச் சோ்ந்த முனைவா் சுப. திண்ணப்பன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.