அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஜல்லிக்கட்டு மாட்டை அவிழ்த்து விடுவதில் தகராறு: இருவருக்கு கத்திக்குத்து

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து

News image

ஜல்லிக்கட்டு மாட்டை அவிழ்த்து விடுவதில் தகராறு: இருவருக்கு கத்திக்குத்து

Updated On :14 ஜனவரி 2021, 12:37 pm IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்து விடுவதில் நடந்த சண்டையில் இருவருக்கு கத்திக்குத்து, கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார்(27), தேவேந்திரன் (25).

இவர்கள் இருவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்களத்தில் தங்கள் மாட்டை அவிழ்த்து விடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பொழுது, மாட்டின் உரிமையாளர்களுக்குள் முன்னெடுத்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கும் கத்திகுத்து ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இருவருக்கும் காயம் பலமாக ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவம் குறித்து ஒருவரை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.