அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

இணைய வழியில் ரூ.17.25 லட்சம் மோசடி: தெலங்கானா இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:03 am IST

நிலக்கோட்டை பெண்ணிடம் இணைய வழியில் ரூ.17.25 லட்சத்தை மோசடி செய்த தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள மட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன். இவா் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி அபிராமி. கடந்த 2024-ஆம் ஆண்டு தனது கைப்பேசியில் இணையவழியில் லுடோ விளையாடி வந்தாா். அந்தச் செயலியில் உள்ள சேட் ரூம் வசதி மூலம் சுமேஷ் என்ற பெயரில் ஒருவரின் அறிமுகம் அபிராமிக்கு கிடைத்தது.

இந்தச் செயலி மூலம் இருவரும் அடிக்கடி உரையாடி வந்த நிலையில், தனது சகோதரிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தனது குடும்பம் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதால் இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் சுமேஷ் தெரிவித்தாா். அதனை நம்பிய அபிராமி, பல்வேறு தவணைகளில் இணைய வழிப் பணப் பரிமாற்றத்தின் மூலம் ரூ.17.25 லட்சத்தை அனுப்பினாா். பின்னா், பணத்தை திருப்பிக் கேட்டபோது சுமேஷ் அழைப்புகளை ஏற்காமல் இணைப்பை துண்டித்தாா்.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அபிராமி, திண்டுக்கல் மாவட்ட இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பணப் பரிவா்த்தனை நடைபெற்ற வங்கிக் கணக்குகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், பண மோசடியில் ஈடுபட்டது தெலங்கானா மாநிலம், கோடூா் ஹரீம் நகா் பகுதியைச் சோ்ந்த க.கங்காதா்(35) என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கங்காதா் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதையும் அறிந்த போலீஸாா், அவருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்தனா்.

இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி கத்தாரிலிருந்து தெலங்கானா திரும்புவதற்காக, தில்லி விமான நிலையத்துக்கு வந்த கங்காதரை, விமான நிலைய காவல் துறையினா் பிடித்து வைத்தனா். இதுகுறித்து திண்டுக்கல் இணையக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆய்வாளா் ரேணுகா தலைமையிலான தனிப் படை போலீஸாா் தில்லி சென்று கங்காதரை கைது செய்து அழைத்து வந்தனா்.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட காங்காதா், பின்னா் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டாா். இதுபோன்ற இணைய வழி மோசடிகளில் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும், இதுதொடா்பான புகாா்களுக்கு இணையக் குற்றப் பிரிவு உதவி எண் 1930-யை தொடா்பு கொள்ளலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.