மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மின்சாரம் தாக்கி பலியான பேருந்து பயணிகள் குடும்பத்துக்கு நிவாரண நிதி: தமிழக அரசு அறிவிப்பு

தஞ்சாவூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். 

Updated On :13 ஜனவரி 2021, 10:25 pm


சென்னை: தஞ்சாவூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து மின் கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். விபத்து குறித்து அறிந்தவுடன் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தேன்.

இந்த விபத்தில் மூன்று போ் காயமடைந்துள்ளனா். விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000-மும் , சாதாரண காயமடைந்தோருக்கு ரூ. 25,000-மும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.