மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகளும், இரண்டாவதுபிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் தற்போது முதல் பிரிவில் இரண்டு அலகுகளில் மட்டும் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இரண்டாவது பிரிவில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் 240 தொழிலாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர். தற்போது அந்த ஒப்பந்தம் வேறு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனால் 240 தொழிலாளர்கள் பணிபுரிய ஜனவரி 17 ஆம் தேதி வரை காலக்கெடு இருந்தும் வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் அனல்மின் நிலையத்திற்க உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இதனால் பொங்கல் தினத்தில் தொழிலாளர்கள் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு எதிரே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.
இப்பிரச்னைக்கு மேட்டூர் அனல் மின்நிலைய நிர்வாகம் உடனடியாக தீர்வு காணாவிட்டால் முதல் பிரிவில் உள்ள தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


