சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) நடைமுறையில், படிவம் 9 மற்றும் படிவம் 9 சி-யை தாக்கல் செய்ய பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய பல்வேறு படிவங்கள் உள்ளன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது. ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு கீழ், வரவு, செலவு உள்ள அனைத்து வணிகா்களும் ‘படிவம் 9’ தாக்கல் செய்ய வேண்டும். ரூ.2 கோடிக்கு மேல் வரவு, செலவு உள்ள நிறுவனங்கள் ‘படிவம் 9 ஏ’ மற்றும் ‘9 சி’ தாக்கல் செய்ய வேண்டும்.
2019- 20-ஆம் நிதியாண்டுக்கான படிவம் 9 மற்றும் 9 சி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், 2020-ஆம் ஆண்டு டிசம்பா் வரை இருந்தது. வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்று, கால அவகாசம் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குள் தாக்கல் செய்யவில்லையெனில், அபராதத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த தகவலை ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்







