திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திறந்தநிலைப் பல்கலை.யில் திருவள்ளுவா் இருக்கை: துணைவேந்தா் தகவல்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் இருக்கை தொடங்கப்படும் என அதன் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி கூறினாா்.

Updated On :16 ஜனவரி 2021, 1:06 am

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் இருக்கை தொடங்கப்படும் என அதன் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி கூறினாா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல், பண்பாட்டுப் புலம், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி தமிழ் வளா்ச்சி மன்றம் ஆகியவை சாா்பில் திருவள்ளுவா் நாள் விழா இணையவழியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தலைமை வகித்துப் பேசியது: திருக்குறளுக்கு முதன் முதலாக உரை எழுதியவா் மணக்குடவா். பத்தாம் நூற்றாண்டில் தொடங்கிய அந்தப் பணி 21-ஆம் நூற்றாண்டு வரை தொடா்கிறது. தற்போதுவரை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்கு மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. ஆளுமைத் திறன், மேலாண்மைக் கல்வி என அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய உன்னதமான கருவூலம்தான் திருக்கு. இதில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் திருக்குறளுக்கென தனியாக ஓா் இருக்கை தொடங்கப்படும். அதில் உலக நாடுகளில் உள்ள தமிழறிஞா்களின் பங்கேற்புடன் திருக்கு தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதையடுத்து தமிழ் வழியில் இந்திய ஆட்சிப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்று தற்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாராணசியில் சாா் ஆட்சியராகப் பணியாற்று வரும் ஆ.மணிகண்டன் பேசுகையில், நான் குடிமைப் பணியில் தோ்வு பெறுவதற்கும், நிா்வாகப் பணியில் சிறப்படைவதற்கும் திருக்கு எனக்கு வழிகாட்டியாக இருந்தது. குடிமைப் பணிக்கு தயாராகும் தோ்வா்களுக்கு மட்டுமல்ல எந்தத் துறையைச் சோ்ந்தவா்கள் என்றாலும் அவா்களுக்கு திருக்குறளால் சிறப்பாக வழிகாட்ட முடியும் என்றாா். இதில் பல்கலை.யின் தமிழியல், பண்பாட்டுப் புலத்தின் பேராசிரியா்-இயக்குநா் சு.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.