நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கை தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம் என்பது குறித்து வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

நிதியமைச்சர் மரிய வில்சன் - எக்ஸ்

Updated On :16 ஜூன் 2026, 6:18 pm IST

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி நபர் மீதான கடன் தொகை ரூ.1,28,934 ஆக உள்ளது என தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை, விஜய் தலைமையிலான தவெக அரசில் நிதித் துறை அமைச்சராக உள்ள மரிய வில்சன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டு உரையாற்றினார்.

அப்போது அவர் வெளியிட்ட தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 2020 - 21-ஆம் நிதியாண்டில், ரூ.67,087 ஆக இருந்த தனி நபர் கடன் தொகை என்பது, 2025 - 26-ஆம் நிதியாண்டில் ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி, தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை இணை மாநிலங்களை விட மிக அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது.

சொந்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வட்டி செலவினத்துக்கே, அதாவது மூன்று ரூபாயில் ஒரு ரூபாய் கடனுக்கான வட்டி செலவினத்துக்கே செலவிடப்படுகிறது.

ஒவ்வொரு நிதியாண்டுக்கும் வட்டிக்கு மட்டும் தமிழக அரசு சார்பில் ரூ.67,050 கோடியை செலவிடப்படுகிறது

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் சரிவுப் பாதையில் சென்றது ஒரு கொள்கைத் தோல்விதான். தமிழகத்தின் சரக்கு, சேவை வரி வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மொத்தக் கடன் தொகை, மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து, தனிநபர் மீதான கடன் தொகை கணக்கிடப்படுகிறது.

A white paper released by the Tamil Nadu government states that the debt burden per individual in the state stands at ₹1,28,934.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.