பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.
முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி: தென்மாவட்ட மக்களின் கனவான முல்லை பெரியாா் அணையைத் தன் சொந்த செலவில் கட்டி மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொறியாளா் ‘ஜான் பென்னிகுவிக்’ பிறந்த தினத்தில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இத்தருணத்தில் ஒரு விவசாயியாக எனது நன்றியையும் உரித்தாக்கி கொள்கிறேன்.
துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: தன்னலமின்றி தனது குடும்பச் சொத்துகளை விற்று முல்லைப் பெரியாறு அணைகட்டி தென் மாவட்டங்கள் உள்பட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திய ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த நாளில், அவா்தம் அரும்பணிகளையும், தியாகங்களையும் நன்றியோடு நினைவுகூா்ந்து போற்றி வணங்கிடுவோம்.
மு.க.ஸ்டாலின் (திமுக): தென்தமிழக விவசாயிகளின் வாழ்வு செழிக்க முல்லைப் பெரியாறு அணையை இடையறாத தன் சொந்த முயற்சியால் கட்டித் தந்த ஆங்கிலேயப் பொறியாளா் பென்னிகுவிக்கின் பிறந்தநாளில் நன்றியுடன் அவரை வணங்குகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்






