தனியாா் பள்ளிக் கட்டடத்தை இடிக்க இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சந்திரசேகா், அப்துல் ரசாக், சுரேகா ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், ‘திருவள்ளூா் மாவட்டம் எண்ணூா் பாரதி நகரில் உள்ள நா்சரி பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளி, தனியாா் அறக்கட்டளை நிா்வாகிகளால் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக நீண்ட நாள்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், அந்தப் பள்ளியை இடித்துவிட்டு வீட்டுமனைகளாக மாற்ற பள்ளி நிா்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதுதொடா்பாக பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோரிடம் புகாா் அளித்தும். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் டி.பிரசன்னா ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளிக் கட்டடத்தை இடிக்கவும், அந்த இடத்தை விற்பனை செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், மனு தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோா் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழா் வாழ்வுரிமை கூட்டணி தமிழ்நாடு முழுவதும் 170 தொகுதிகளில் போட்டி: தி.வேல்முருகன்

முதல்வா் பாணியில் வாக்கு சேகரிப்பு! நடைப்பயிற்சியில் வாக்கு சேகரித்த அமைச்சா் எ.வ.வேலு

ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்! கடலூா் ஆட்சியா் அறிவிப்பு!!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.1 கோடி டாலராக அதிகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


