ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தேர்தல் பணியில் கூடுதலாக 4,495 காவலர்கள்: திரிபாதி

தமிழகத்தில் தேர்தல் பணிக்காக கூடுதலாக 4,495 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
டிஜிபி திரிபாதி
Updated On :1 ஏப்ரல் 2021, 6:26 am

DIN

தமிழகத்தில் தேர்தல் பணிக்காக கூடுதலாக 4,495 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பாக டிஜிபி திரிபாதி தெரிவித்ததாவது, தேர்தல் பணிக்காக கூடுதலாக 4,495 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடக்கும் தேதியில் சட்டம் - ஒழுங்கு காவலர்கள் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்தில் பதட்டம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

ஆயுதப்படை, ஊர்காவல் படை, முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.