எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்றது: துணை முதல்வர் பேச்சு

தமிழக பொதுத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்றது அது மக்களிடம் செல்லுபடியாகாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

News image
திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்றது
Updated On :1 ஏப்ரல் 2021, 12:46 pm

DIN

தமிழக பொதுத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்றது அது மக்களிடம் செல்லுபடியாகாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பாவை ஆதரித்து வில்லாபுரத்தில் அவர் பேசியது: 

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 2023ஆம் ஆண்டிற்குள் வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 2016ல் அறிவித்த அதிமுகவின் தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2006ல் திமுக பொய்யான தேர்தல் அறிக்கையைச் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டார்கள். அப்போது இரண்டு ஏக்கர் நிலம் என அறிவித்து கையளவு நிலம் தருவேன் என கருணாநிதி தெரிவித்தார். ஆனால் அதுவும் தராமல் மக்களை ஏமாற்றி விட்டார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு. எனவே அது செல்லாது அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. அதிமுக அறிவித்த தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றியது உடன் அறிவிக்காத திட்டங்களான, பெண்களுக்கு இருசக்கர வாகனம் கொடுக்கப்பட்டு ஆணுக்குப் பெண் சமம் என பெரியாரின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் உயர்கல்வியில் கற்கும் மாணவர்கள் 24 சதவீதம் தான் உள்ளது ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி சேரும் மாணவர்கள் 49 சதவீதம் பேர் உள்ளனர். அதிமுக மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்துச் செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2006 திமுக ஆட்சியின் போது ரூ.45 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழிற்சாலைகள் நிறுவியுள்ளது. ஆனால் அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 16 லட்சத்து 87 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதன் மூலம் 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.