மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்துடன் வாக்களித்தார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில்  மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  குடும்பத்தாருடன் வாக்களிதார்.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்துடன் வாக்களித்தார்

Updated On :6 ஏப்ரல் 2021, 5:31 am

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில்  மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  குடும்பத்தாருடன் வாக்களிதார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு 7 மணிக்குத் தொடங்கினாலும் காலை 6 மணி முதலே பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்ததைக் காண முடிந்தது.

தமிழகத்தில் பொதுவாக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மநீம கட்சித் தலைவர் கமல், நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.