ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்சி: 9 தொகுதிகளில், 3,292 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3292 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கியது. 

News image
திருச்சி: 9 தொகுதிகளில், 3,292 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்
Updated On :6 ஏப்ரல் 2021, 2:30 am

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3292 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கியது. 

Story image

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு திருச்சி மேற்கு, மண்ணச்சநல்லூர், லால்குடி ,முசிறி,  துறையூர் உள்ளிட்ட 9 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

Story image

  இந்தத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது இதற்காக 9 தொகுதிகளில் சேர்த்து மொத்தம் 32 92 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 159 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1490 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 11,35,780 ஆண், 12,02,728 பெண், 237 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 23 லட்சத்து 38 ஆயிரத்து 745  பேர் வாக்களிக்க உள்ளனர்.

16 ஆயிரம் பேர் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Story image

காலை 7 மணிக்கு தொடங்கி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
 

காலை முதலே பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நாங்கள் செல்லும் இடமெல்லாம் எங்களுக்கு பொது மக்கள் நல்ல வரவேற்பு அளிக்கின்றனர்.

Story image

மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, தில்லை நகர் மக்கள் மன்றத்தில் தனது வாக்கை பதிவு செய்து விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Story image

திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி அஞ்சல் வாக்கை இன்று பதிவு செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.