தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி இடைக்கால விளக்கம்

​தேர்தல் பிரசாரத்தின்போது அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஏப்ரல் 2021, 1:49 pm

DIN


தேர்தல் பிரசாரத்தின்போது அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மரணம் குறித்து சரச்சைக்குரிய வகையில் பேசியதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஏப்ரல் 7-க்குள் (இன்று) விளக்கமளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து இடைக்கால விளக்கமளித்துள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள உதயநிதி, முழு உரை மற்றும் புகாரின் நகல் கிடைத்தவுடன் விரிவாக விளக்கமளிக்க அவகாசம்கோரி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.