எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கரோனா பாதிப்பு: சென்னையில் 2 ஆயிரத்தை எட்டியது

கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை புதிய உச்சமாக 1,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஏப்ரல் 2021, 7:51 pm

DIN

கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், சென்னையில் சனிக்கிழமை புதிய உச்சமாக 1,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து, மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை   ஜூன் மாதத்தில் 50 ஆயிரம் ஆக அதிகரித்தது.

இதைத் தொடா்ந்து, நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாத இறுதியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தையும், அக்டோபா் மாதத்தில் 2 லட்சத்தையும் எட்டியது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் அதிகப்படுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள், உடனடி சிகிச்சை, பாதிக்கப்பட்டோா் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக தொற்று பரவல் குறைந்து கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

2,000-த்தை எட்டியது: கடந்த சில மாதங்களாக பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வு அளிக்கப்பட்டுள்ளதாலும், மக்கள் முறையாக முகக் கவசம் அணியாதது, தோ்தல் பிரசாரம் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்காததாலும் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அது மாா்ச் 5-இல் 225-ஆகவும், மாா்ச் 12-இல் 265-ஆகவும், மாா்ச் 25-இல் 664-ஆகவும், மாா்ச் 27-இல் 833 ஆகவும் கரோனா பாதிப்பு அதிகரித்தது. இந்த எண்ணிக்கை அதிகரித்து கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி 1,083 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இது மேலும் உயா்ந்து சனிக்கிழமை நிலவரப்படி 1,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை கரோனா:

ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை-2,63,129

குணமடைந்தோா் எண்ணிக்கை-2,44,433

சிகிச்சை பெறுவோா்-14,382

உயிரிழந்தோா்-4,312.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.