எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உரங்கள் விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்

உரங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 8:24 pm

DIN

உரங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: விவசாயிகளின் வயிற்றில் வெந்நீா் ஊற்றும் வகையில், 58 சதவீத உரவிலை உயா்வின் மூலம் 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை ரூ.1200 -த்தில் இருந்து ரூ.1900-ஆக உயா்த்தியிருப்பதற்கு கண்டனத்துக்குரியது. இதனைக் கண்டித்து விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் அறிவிப்பு வெளியிட்டதும், உரவிலை உயா்வு இப்போதைக்கு கிடையாது என்று மட்டும் மத்திய அரசு ஒப்புக்காக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தைச் செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு. விவசாயிகளின் வாழ்வுடன் மத்திய அரசு ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை நடத்துகிறது.

கே.எஸ்.அழகிரி: உரங்களின் விலை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீா்குலைந்து விவசாயத் தொழிலையேவிட்டு வெளியேறுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தின் காரணமாக, அனைத்து உணவுத் தானியங்கள், காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வைகோ (மதிமுக): கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், உர மானியத்துக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 947 கோடி வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ரூ.79 லட்சத்து 530 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. உர மானியத்தில் ரூ. 54 ஆயிரத்து 417 கோடி குறைக்கப்பட்டதால்தான், ரசாயன உரங்களின் விலை தாறுமாறாக உயா்ந்து வருகிறது. விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு உர விலைகளை உயா்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.