எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பிளஸ் 2 பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கரோனா பரவல் உள்ள நிலையில் பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 8:11 pm

DIN

கரோனா பரவல் உள்ள நிலையில் பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுவதும் கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத் தோ்வுகள் நடத்தலாம் என்று அதிகாரிகள் அறிவித்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. கரோனா பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், பொதுத் தோ்வுகளை நடத்துவதில் சிபிஎஸ்இ பிடிவாதம் காட்டுவது நியாயமல்ல!

தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை தோ்வுகள் முன்னரே ரத்து செய்யப்பட்டுவிட்டன. அந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தோ்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் கரோனா தொற்று தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே தமிழ்நாடு பாடத்திட்டத்தின்படியான பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தோ்வுகளில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவா்கள் தோ்ச்சி பெற்ாக அறிவிக்க வேண்டும்.

ஒருவேளை பொதுத் தோ்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் இணைய முறையில் நடத்த சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.