இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா வார்டாக மாற்றப்படும் மாநிலக் கல்லூரி மாணவர் விடுதி

சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில கல்லூரி மாணவர் விடுதி கரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது.

News image
கரோனா வார்டாக மாற்றப்படும் மாநிலக் கல்லூரி மாணவர் விடுதி
Updated On :10 ஏப்ரல் 2021, 7:04 am

DIN


சென்னை: சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாநில கல்லூரி மாணவர் விடுதி கரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநிலக் கல்லூரியின் மாணவர் விடுதியில் 250 கரோனா படுக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.

சென்னையில் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர் விடுதியை சுத்தப்படுத்தி, கரோனா நோயாளிகள் தங்கும் வார்டாக மாற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. நாள்தோறும் கரோனா பாதிக்கப்படுவரின் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.