தமிழகத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 6, 618 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் புதிதாக 6,618 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 2,124 பேர் புதிதாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,33,434 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2,314 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 8,78,571 பேர் குணமடைந்துள்ளனர். 12,908 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 88,538 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்தாண்டு இதே நாளில் 58 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com