யுகாதி பண்டிகை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

யுகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மக்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

யுகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மக்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தெலுங்கை தாய் மொழியாக கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மனதளவில் ஒன்றுபட்டு நம் நாட்டின் ஆரோக்கியத்திற்காக கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த யுகாதியை கொண்டாடுவோம்.
தகுதியானவர்கள் கரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனா பரவாமல் தடுத்து அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம். அனைவருக்கும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது யுகாதி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com