மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேளச்சேரி வாக்குச் சாவடிக்கு மறுவாக்குப் பதிவு

வேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 ஏப்ரல் 2021, 4:19 pm

DIN


வேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் அக்ஷயா பள்ளி மையத்தில் 92-வது வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் செலுத்தப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், வேளச்சேரி தொகுதி தேர்தல் பார்வையாளரும் தனித்தனியே அறிக்கைகளை அளித்தனர். இவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் வேளச்சேரி 92-வது வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.