சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23,625 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 2,80,184 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23,625 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவுக்கு 4,386 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மொத்தமாக 2,80,184 பேர் பாதிக்கப்பட்டதில் 2,52,173 பேர் குணமடைந்துள்ளனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அண்ணா நகரில் அதிகபட்சமாக 2,576 பேரும், தேனாம்பேட்டையில் 2,569 பேரும், ராயபுரத்தில் 2,133 பேரும், கோடம்பாக்கத்தில் 2,067 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.