ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

சென்னையில் தனியார் கரோனா பாதுகாப்பு மையம் தொடங்க அனுமதி: ஆணையர்

சென்னையில் தனியார் கரோனா பாதுகாப்பு மையம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :21 ஏப்ரல் 2021, 5:23 am

DIN

சென்னையில் தனியார் கரோனா பாதுகாப்பு மையம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

சென்னை தரமணியில் சென்னை பல்கலைக்கழக விடுதியில் 900 படுக்கைகளுடன் கூடிய கரோனா பாதுகாப்பு மையம்(கோவிட் கேர் சென்டர்)  அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் இன்று ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

மக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட எந்த அறிகுறிகள் இருந்தாலும் வீட்டிற்கு வரும் தன்னார்வலர்களிடம் தெரிவித்து முறையாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 

கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேண்டும் என்பதே எங்களது முதல் நோக்கம். எனவே இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

சென்னை பல்கலைக்கழக விடுதியில் 900 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா பாதுகாப்பு மற்றும் சிகிச்சை மையம் தயாராகி வருகிறது. 

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனை, ஹோட்டல்  தனியார் அமைப்புகளுக்கு கரோனா பாதுகாப்பு மையம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார். 

கரோனா பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பமுள்ள மருத்துவமனைகள், அமைப்புகள் - படுக்கை வசதி, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதல் மாநகர நல அலுவலரை (தலைமையகம்) (94450 26050) அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது சென்னை பெருநகர மாநகராட்சியில் 12 கரோனா பாதுகாப்பு மையங்கள் உள்ளன. மேலும் சென்னையில் இப்போது 12,000 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.