வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கேரளம் செல்லும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனை

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் ஏலத்தோட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனையை காமயகவுண்டன்பட்டியில் புதன்கிழமை செய்து கொண்டனர்.

News image
கேரளா செல்லும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனை
Updated On :21 ஏப்ரல் 2021, 11:07 am

DIN

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் ஏலத்தோட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனையை காமயகவுண்டன்பட்டியில் புதன்கிழமை செய்து கொண்டனர்.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கேரளாவிற்கு ஏலத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொண்டனர்.

நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பரிசோதனைக்காக ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தனர்.

மருத்துவ அலுவலர் சுதா, ஆய்வக நுட்பனர் பானு, செவிலியர்கள் செல்வி, மற்றும் பயிற்சி செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் அமரேசன், சூர்யகுமார் ஆகியோர் 100க்கும் மேலானவர்களுக்குச் சோதனை செய்தனர்.

சித்த மருத்துவர் சிராஜ்தீன் தொழிலாளர்களிடம், கரோனா விழிப்புணர்வு பற்றிப் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.