மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொளவேடு கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

தொளவேடு கிராமத்தில் புதிதாக ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது.

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 10:57 am

DIN

தொளவேடு கிராமத்தில் புதிதாக ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தொளவேடு கிராமத்தில் டி.கே. கிருஷ்ணமூர்த்தி, எஸ். முரளிதரன் ஆகியோர் தலைமையில் புதிதாக ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவில் குறைந்தபட்ச பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விழா நடைபெற்றது. 

Story image

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த  25ம் தேதியன்று ஆலயத்தில் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை சுதர்சன ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள்  நடத்தப்பட்டு பின்னர் மாதவரம் திரு ஐயங்கார் தலைமையில் கொண்ட புரோகிதர்கள் யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரைக் கொண்டு சுமார் 7 மணியளவில் மேளதாளங்கள் முழங்க ஆலயத்தின் கோபுரம் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். 

பின்னர் அங்கு வந்திருந்த குறைந்த அளவிலே கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அவர்களுக்கு கோவில் சார்பில் முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் வந்திருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.கே.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.முரளிதரன் கொண்ட குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.