
சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஞாயிறு பொதுமுடக்கத்தால் சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் அதிக அளவிலான மக்கள் சமூக இடைவெளியின்றி குவிவதால், அதனைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தடையை மீறுவோர் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கத்தின்போது இறைச்சி கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது சனிக்கிழமையும் கடைகளைத் திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.