தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உசிலம்பட்டியில் விழிப்புணர்வு வாகனப் பிரசார துவக்க விழா

கரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வராமல் தடுக்க விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் கிராமங்களில் பிரசார துவக்க விழா உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

உசிலம்பட்டியில் விழிப்புணர்வு வாகனப் பிரசார துவக்க விழா

Updated On :1 ஆகஸ்ட் 2021, 8:56 am

DIN

உசிலம்பட்டி: கரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வராமல் தடுக்க விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் கிராமங்களில் பிரசார துவக்க விழா உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க கிராமங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வாகனங்கள் மூலம் உசிலம்பட்டியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தை உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சு.ரஞ்சனி சுதந்திரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வம், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மலேசியா பாண்டி தி.மு.க ஒன்றிய செயலாளர் சுதந்திரம் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வபாண்டி, துரைப்பாண்டி, தனலட்சுமி பன்னீர்செல்வம், ரம்யா துரைப்பாண்டி, திமுக மாவட்ட நெசவாளர் அணி லிங்கசாமி மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒலிபெருக்கி மூலமும் மற்றும் சுகாதாரத் துறை சார்பாக கரோனா மூன்றாவது அலைக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.