தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கருணாநிதி நினைவுநாள்: ஒசூர் திமுக சார்பில் நினைவஞ்சலி

கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு ஒசூர் மாநகர திமுக சார்பில் நினைவஞ்சலி இன்று செலுத்தப்பட்டது. 

News image

ஒசூரில் கருணாநிதியின் நினைவஞ்சலி

Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:38 am

DIN

 
ஓசூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஒசூர் மாநகர திமுக சார்பில்  தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் அருகில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு ஒசூர் மாநகர திமுக சார்பில் நினைவஞ்சலி இன்று செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்  ஒய். பிரகாஷ் எம்எல்ஏ கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

Story image

இதில் ஒசூர் மாநகர பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏ எஸ்ஏ சத்யா  தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் விஜயகுமார் ஒன்றிய செயலாளர் சின்னப்பிள்ளை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Story image

இதனை தொடர்ந்து காமராஜர் காலனி மாவட்ட செயலாளர் ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ எஸ் ஏ சத்யா ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். இதனை தொடர்ந்து ராயக்கோட்டை சாலை ராகவேந்திரா கோவில் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.