நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எஸ்.பி. வேலுமணியிடம் விசாரணை; எம்எல்ஏ விடுதியில் அதிமுக தொண்டர்கள் போராட்டம்

சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News image

எஸ்.பி. வேலுமணியிடம் விசாரணை; எம்எல்ஏ விடுதியில் அதிமுக தொண்டர்கள் போராட்டம்

Updated On :10 ஆகஸ்ட் 2021, 8:24 am

DIN

சென்னை: சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறையில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை நடைபெற்று வருவதை அறிந்த ஆதரவாளர்களும், பத்திரிகையாளர்களும் அப்பகுதியில் குவிந்தனர்.

Story image

லஞ்ச ஒழிப்புக் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Story image

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் சோதனை நடைபெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருக்கமானவர் வீடு உள்பட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளதாகக் கூறி அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், இன்று அவரது வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.