மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மழை பெய்ததால் அழுகிய நிலையில் வெங்காயம்: விவசாயிகள் கவலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  கண்ணியம்பட்டியில் நான்கு நாள்களாக மழை பெய்ததால் வெங்காயம் அழுகிய நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

News image
மழை பெய்ததால் அழுகிய நிலையில் வெங்காயம்
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:14 am

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கண்ணியம்பட்டியில் நான்கு நாள்களாக மழை பெய்ததால் வெங்காயம் அழுகிய நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பி கண்ணியம்பட்டி கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் அறுவடை செய்யும் நிலையில், கடந்த நான்கு நாள்களாக பெய்த மழையினால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் முற்றிலும் அழியும் நிலையில் ஏற்பட்டது. 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய தொழிலில் முதலீடு செய்தும் மற்றும் அவற்றுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், கடந்த நான்கு நாள்களாக பெய்த மழையால் விளைந்த வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இது சம்பந்தமான விவசாயத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.