சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும்.
கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் அறிவித்ததாவது,
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும்.
காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க.. வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் முழு விவரம்
சென்னை கொளத்தூரில் நவீன விற்பனை மையம்
விளைபொருள்களுக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களுக்காகவும் சென்னை கொளத்தூரில் நவீன விற்பனை மையம் அமைக்கப்படும்.
முருங்கைக்காய் சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்
முருங்கைக்காய் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை அதிகரிக்க முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் ஏற்படுத்தப்படும்.
7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.