ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருப்பூரில் காங்கிரஸ் சார்பில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருப்பூரில் காங்கிரஸ் சார்பில் 75 ஆவது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிர்வாகிகள்

Updated On :14 ஆகஸ்ட் 2021, 9:58 am

DIN

திருப்பூர்: திருப்பூரில் காங்கிரஸ் சார்பில் 75 ஆவது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் 20 பேருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, தியாகிகளின் வரலாறு புத்தகமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.பத்மநாபன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.