சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை: பேரவையில் எழும்பூர் எம்எல்ஏ

முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையில் எழும்பூர் உறுப்பினர் பரந்தாமன் வியாழக்கிழமை பேசியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:31 am

DIN

முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவையில் எழும்பூர் உறுப்பினர் பரந்தாமன் வியாழக்கிழமை பேசியுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் தரமில்லாமல் கட்டப்பட்டிருப்பதாக கடந்த ஒரு வாரமாக புகார் எழுப்பப்பட்ட நிலையில், நேற்று அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்துள்ளது. சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் கொண்டுவந்தார்.

அப்போது அவர் பேசுகையில், தொட்டாச்சிணுங்கி போல் தொட்டால் விழும் கட்டடத்தை அதிமுக கட்டியுள்ளது. புளியந்தோப்பில் 9 மாடிகள் கொண்ட கே.பி.பார்க் குடியிருப்பை 17 மாதங்களில் குறிகிய காலத்திலேயே கட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், யார் தவறு செய்தாலும் முதல்வர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். கட்டுமானப் பணியில் முறைக்கேடு உறுதி செய்யப்பட்டால், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.