செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

கரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை போடாதவர்கள் கவனத்துக்கு..

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image

கரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை போடாதவர்கள் கவனத்துக்கு..

Updated On :28 ஜனவரி 2024, 9:28 am IST


தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், சிறப்பு முகாம்கள் மூலமும் பல இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மாநகராட்சியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 16.01.2021 மற்றும் 10.07.2021 க்கு இடையில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 5,64,048 கோவாக்சின் மற்றும் 10,48,575 கோவிஷூல்டு பயனாளிகள் இப்போது தடுப்பூசிகளின் 2வது தவணை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களில், இரண்டாவது தவணை செலுத்தாமல் இருக்கும் பயனாளிகளின் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களில், பலருக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதில் இன்னமும் ஒருவித தயக்கம் நிலவுகிறது. எனவே, அதனை விடுத்து, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதோ, முதல் தவணை செலுத்தி, இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவர்களின் புள்ளி விவரம் மாவட்ட வாரியாக..

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.