ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கூத்தாநல்லூர்: மத்திய அரசைக் கண்டித்து கம்யூ. சார்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்

கூத்தாநல்லூர் வட்டத்தில், மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மக்கள் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 9:17 am

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மக்கள் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூர் வட்டம், மன்னார்குடி ஒன்றியம் சாத்தனூரில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு, தலைவர் வி.ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சண்முகம் தேசியக் கொடியை  ஏற்றி வைத்தார்.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.வீரமணி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் துரை அருள்ராஜன், இளைஞர் பெருமன்ற ஒன்றியத் தலைவர் அ.பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பி.கே.ராஜா, எம்.பக்கிரிசாமி, மணிகண்டன், சரிதா, நாகப்பன், சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அமைச்சர்களாகவும், மக்களவை உறுப்பினர்களாகவும் இருந்தனர். 

Story image

தொடர்ந்து, வேளாண் சட்டத்திற்கு எதிராக விவாதம் செய்தனர். மக்களவையில், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். பொகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும். கார்ப்பரேட்டுக்கு வழங்கும் சலுகையை  தடுத்து நிறுத்த வேண்டும். ரயில், வங்கி, காப்பீடு, ராணுவம் உள்ளிட்டவைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை உடைத்து, சிதைத்து வருவது போன்ற நடைமுறைகளால் மக்களை வாட்டி, வதைத்து வரும் மோடி அரசிற்கு எதிராக முழக்கமிட்டு, வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.