ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சேவூர் அருகே முதியவரைக் கொலை செய்து தலைமறைவாக இருந்த இளைஞர் கைது

சேவூர் அருகே ராமியம்பாளையத்தில் முதியவரைக் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

News image
கைது செய்யப்பட்ட சந்தோஷ்
Updated On :24 ஆகஸ்ட் 2021, 5:36 am

DIN


அவிநாசி: சேவூர் அருகே ராமியம்பாளையத்தில் முதியவரைக் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் அருகே ராமியம்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தவர் வெங்கடாசலம் (80). இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் ராசு என்பவரின் மகன் சந்தோஷ் (25).

இவர்களுக்குள் ஏற்கெனவே நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம்போல ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் கட்டையால் தாக்கியதில் வெங்கடாசலம் உயிரிழந்தார்.

வெங்கடாசலம் உயிரிழந்ததை அறிந்த சந்தோஷ் அங்கிருந்து தலைமறைவானர். இது குறித்து சேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான காவலர்கள் தனிப்படை அமைத்து, தலைமறைவான சந்தோஷைத் தேடி வந்தனர். 
இதற்கிடையில்,  ராமியம்பாளையத்தில் உள்ள குளப்பகுதியில் தற்போது, இருப்பதாக கிடைத்த தகவலின்படி, அங்கு விரைந்து சென்ற காவலர்கள், தப்பியோட முயன்ற சந்தோஷை பிடித்து கைது செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.