டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டால் அம்மா உணவகம் இருந்திருக்காது: முதல்வர்

ஜெயலலிதா பல்கலை. விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்று பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

News image
காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டால் அம்மா உணவகம் இருந்திருக்காது: முதல்வர்
Updated On :28 ஜனவரி 2024, 4:00 am

DIN


சென்னை: ஜெயலலிதா பல்கலை. விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்று பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான விவாதத்தின் போது, ஜெயலலிதா பல்கலை விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாக அதிமுக உறுப்பினர் கே.பி. அன்பழகன் பேசினார்.

இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் தமிழகத்தில் அதே பெயரில் இப்போது இருந்திக்காது. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் எந்த எண்ணமும் திமுக அரசுக்கு இல்லை. விழுப்புரம் பல்கலைக்கழக விவகாரத்திலும் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று விளக்கமளித்தார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் வலியுறுத்தினர். ஆனால், ஜெயலலிதா பல்கலைக் கழகம் தொடர்ந்து செயல்படாது என்று அமைச்சர் க. பொன்முடி பேரவையில் அறிவித்தார். 

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர வலியுறுத்தியும், தொடராது என்று அறிவித்ததால், பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக விழுப்புரத்தில் ஆளுநர் அனுமதியுடன் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைத்தோம். ஆனால், ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியுடன் திமுக அரசு செயல்படுகிறது என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.