9 மாவட்டங்களில் விடுபட்ட வாக்காளர்கள் பதிவு அலுவலரிடம் பெயர் சேர்க்கலாம்

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் விடுபட்ட வாக்காளர்கள் அந்தந்த பேரவை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் பெயர் சேர்க்கலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  
9 மாவட்டங்களில் விடுபட்ட வாக்காளர்கள் பதிவு அலுவலரிடம் பெயர் சேர்க்கலாம்

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் விடுபட்ட வாக்காளர்கள் அந்தந்த பேரவை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் பெயர் சேர்க்கலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்காக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளில் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. மேற்படி மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, எந்த ஒரு வாக்காளரின் பெயரும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்கப்பட்டு, அவர்களை தொடர்புடைய உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வைத்து ஜனநாயகக் கடமை ஆற்ற வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது.
 மேற்படி 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பிற்காக தாயரிக்கப்படும் வாக்காளர் பட்டியல் தனியாக தயாரிக்கப்படுவது அல்ல. இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்து 19.3.2021 அன்று வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களின் அடிப்படையிலேயே கிராம ஊராட்சி வார்டு வாரியான உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றது.
மேற்படி ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல், 2021 தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களைக்கொண்டு கிராம ஊராட்சி வார்டு வாரியாக தயாரிக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலரால் 31.08.2021 அன்று வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, 19.3.2021 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனில், முதலில் அவர்கள் தொர்புடைய சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று அவர்களது பெயர்களை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com