தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பட்டாசு குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல்

சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்து அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். 

News image
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள். 
Updated On :28 ஆகஸ்ட் 2021, 7:12 am

DIN


 
சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்து அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஈசிஆர் கிராமத்தில் ஒரு பகுதியில் ஒரு பட்டாசு குடோனில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து திருத்தங்கள் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையில் நாகலாபுரம் ராமராஜ்(47) என்பவர் பட்டாசு கடைக்கு தேவையான பட்டாசுகளை வைக்க பயன்படுத்தப்பட்டு வந்த குடோனில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Story image

சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 மூட்டை புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.17 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைத்தனர். குடோன் உரிமையாளர் ராமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.