பள்ளிகள் திறப்பு உறுதி: செப். 15 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

செப்டம்பர் 1-ம் தேதி முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
பள்ளிகள் திறப்பு உறுதி: செப். 15 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
பள்ளிகள் திறப்பு உறுதி: செப். 15 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

செப்டம்பர் 1-ம் தேதி முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

செப்டம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில்,

கேரளத்திலிருந்து வரும் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், மாணவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டவர்களாக என்பதை கண்காணிக்க வேண்டும். 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் விடுதிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com