/

கடற்கரைகளில் ஞாயிற்றுக் கிழமை மக்களுக்கு அனுமதி இல்லை: கட்டுப்பாடுகள்

அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் அனைத்துக் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:02 am

DIN

அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் அனைத்துக் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் விடுதிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டு தலங்களில் வழக்கம்போன்று வார இறுதி மூன்று நாள்களுக்குத் தடை தொடரும்.

வெள்ளிக் கிழமை, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கேரளத்திலிருந்து வரும் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டவர்களாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திட்டமிட்டபடி செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.