பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோகுலாஷ்டமி: அருப்புக்கோட்டை ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தையடுத்துள்ள   ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் திங்கள்கிழமை  கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடும்,உலக நன்மை வேண்டி தியானமும் நடைபெற்றது.

News image

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தையடுத்துள்ள   ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் திங்கள்கிழமை  கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடும்,உலக நன்மை வேண்டி தியானமும் நடைபெற்றது.

Updated On :30 ஆகஸ்ட் 2021, 4:19 pm IST

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தையடுத்துள்ள   ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் திங்கள்கிழமை  கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடும்,உலக நன்மை வேண்டி தியானமும் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை ஜோதிபுரம்  அருகே  அருள்மிகு சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. தமிழக அரசின் தற்போதைய ஊரடங்கு விதிமுறைகளின்படி திங்கள்கிழமை கோவிலின் வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆவணி மாத திங்கள்கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு இன்று நன்பகலில்  சிறப்பு உச்சிகால வழிபாடு  நடைபெற்றது. அப்போது, அருள்மிகு சத்தியநாராயணர் மற்றும் ஸ்ரீகிருஷ்ண பகவானின் திரு உருவப்படங்களுக்கு சிறப்பு மலர்மாலை அணிவித்து அலங்காரம் செய்வித்து தீப, தூப ஆராதனைகள் செய்யப்பட்டன.

அதையடுத்து, ஸ்ரீசீரடிசாய்பாபாவிற்கான சிறப்பு வழிபாட்டுப்பாடல்களுடன், முன்னதாகவே சிறப்பு மலரலங்காரம் செய்யப்பட்ட பாபாவிற்கு பக்திப்பாடலுக்கேற்றபடி பஞ்சதீப, ஏக தீப ஆராதனைகள் செய்யப்பட்டன.

பின்னர் கோவில் ஊழியர்கள் ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கு வெண்சாமரம் வீசியபடி இருக்க, சிறப்பு பிரசாத அர்ப்பணிப்பாகிய நைவேத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. வழிபாடு முடிந்ததும், முழு அலங்காரத்தில் ஸ்ரீசீரடி சாய்பாபா அருள்பாலித்தார்.

அப்போது, இவ்வழிபாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக, கோவில் ஊழியர்கள், நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்டு 3 நிமிட மெளன தியானத்தில் ஈடுபட்டு, உலக நன்மை வேண்டி சிறப்பு சங்கல்ப வழிபாடும் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.