இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், தென்னாப்ரிக்காவிலிருந்து நேற்றிரவு பெங்களூரு வந்துள்ளனர். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு வயது 66. மற்றொருவருக்கு வயது 46. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. இறந்தவர்கள்கூட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றும் அதிசயம்?
விழிப்புணர்வுடன், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். டெல்டா கரோனாவை விட 5 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது ஒமைக்ரான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக மக்கள் யாரும் பதற்றம் அடையாமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


